கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோ திமணி ஆகியோரை ஆதரித்து கோவையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழக மக்களை நான் எப்போதும் விரும்புகிறேன். தமிழர்களின் மொழி, வரலாறு, கலாசாரம் போன்றவை எனக்குப் பல்வேறு தருணங்களில் வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன. இப்போது நடைபெறுவது சாதாரணமான தேர்தல் அல்ல, இது சித்தாந்த ரீதியிலான போர்.
அதானியின் தொழிலதிபர் அரசு: மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து மோடி அரசு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மோடி அரசு என்று நான் கூறினாலும் உண்மையில் அது தொழிலதிபர் அதானியின் அரசுதான். ஏனெனில் பிரதமர் மோடி எல்லா வேலைகளையும் கவே செய்கிறார்.
அதானிக்கா அதானிக்கு இவ்வாறு சலுகை காட்டுவது பற்றி நாடாளுமன்றத் தில் பேசினேன். உடனே எனது எம்.பி. பதவியைப் பறித்தனர்.
அரசு எனக்குக் கொடுத்திருந்த வீட்டையும் பறித்தனர். ஆனால், வீட்டை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் தமிழகத்திலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் எனக்கு வீடு உள்ளது.
பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது எனக்கு தோசை பிடிக்கும் என்கிறார். தில்லி சென்றதும் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்கிறார். பிரதமர் மோடி தமிழர்களின் வரலாறு, கலாசாரத்தை தாக்குகிறார்.
தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை, பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகத்தின் ஊழல்: பிரதமர் மோடி முதலில் மிகப்பெரிய தான் அரசியலை சுத்தப்படுத்துகிறேன் என்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டம் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விவரங்களை வெளியிடச் சொன்னதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜகவுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
هذه القصة مأخوذة من طبعة April 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்
சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.