தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் வாக்குறுதி
புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ. வைத்திலிங்கத்தை ஆதரித்து சிங்காரவேலர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுவை மாநில வளர்ச்சிக்கு திமுகவும், காங்கிரஸும் பாடு பட்டு வருகின்றன. ஆனால், மாநிலத்தை எப்படி பின்னோக்கி கொண்டு செல்லலாம் என பாஜக செயல்படுகிறது. அந்தக் கட்சியின் செயல்பாட்டை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
புதுவையின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் துணைநிலை ஆளுநரானதும், அரசியல் சட்டத்தை மீறிச் செயல்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. ஆளுநர் மாளிகை முன் முதல்வரை போராட வைத்தது தான் பாஜகவின் சாதனை.
தற்போதைய தமிழக ஆளுநரும் ஐபிஎஸ் படித்தவர்தான். காவல் துறையில் பதவிக் காலம் முடிந்தவுடன் ஆளுநராக்கப்பட்டு, அரசியல் சட்டத்தை மீறி பாஜக முகவர்களைப் போல விளம்பரத்துக்காகவே செயல்படுகின்றனர்.
ரங்கசாமிக்கு நெருக்கடி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் தொல்லை கொடுப்பதில்லை. பாஜக கூட்டணியில் உள்ள புதுவை முதல்வர் என். ரங்கசா மிக்கும் ஆளுநர் மூலம் நெருக்கடி அளிக்கப்படுகிறது. பாஜகவை பொருத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி பற்றி கவலைப்படுவதில்லை. எப்படி வேண்டுமானாலும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம், கொள்கையாக உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة April 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் பிரதமரின் 45 மணி நேர தியானம் தொடக்கம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கினார்.
‘அக்னிபான்’ ராக்கெட் திட்டம் வெற்றி
தனியார் புத்தாக்க நிறுவனம் தயாரித்த 'அக்னிபான் சார்டெட் ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜம்முவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவில் 150 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.
76 நாள்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு
57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பிரதமர் பதவியின் மாண்பை சீர்குலைத்தவர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
சிறார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை
நாளைமுதல் அமல்
அந்நிய நேரடி முதலீடு 4,442 கோடி டாலராகச் சரிவு
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 4,442 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஸ்வியாடெக்
டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 3 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்கள் பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ரூ.500 நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு; நவீனமயமாகும் கல்வி
கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.