மேலும், நாடாளுமன்றம், பேரவை உறுப்பினா்கள் லஞ்சம் வாங்குவதும் ஊழலில் ஈடுபடுவதும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையை சிதைத்துவிடும்; உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின்கீழ் பாதுகாக்கப்பட்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தகைய லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுதி செய்து, கடந்த 1998-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்திருந்தநிலையில், அந்தத் தீா்ப்பை சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டபோது, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் சிபு சோரன் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் சிலா் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த எம்.பி.க்களின் ஆதரவால் நரசிம்ம ராவ் அரசு தப்பியது.
இதைத் தொடா்ந்து, சிபு சோரன் உள்பட அக்கட்சி எம்.பி.க்கள் 5 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 105 (2), 194 (2) பிரிவுகளின்கீழ், குற்றவியல் விசாரணையில் இருந்து உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாக குறிப்பிட்டு, சிபு சோரன் உள்ளிட்டோா் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 1998-ஆம் ஆண்டில் ரத்து செய்தது.
هذه القصة مأخوذة من طبعة March 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்
பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.