இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஸாவில் சண்டையை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸýக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை மிக மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று நம்புகிறேன்.
அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் பலரை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார் ஜோ பைடன்.
இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர்தான் அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ராய்ட்டர்ஸ்' நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
هذه القصة مأخوذة من طبعة February 28, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 28, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை
இரண்டே வாரங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 3-ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா (படம்) சனிக்கிழமை சாதனை படைத்தாா்.
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்டதீ விபத்தில் சிக்கி நான்கு சிறார் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு
மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, தேசியத் தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே25) வாக்குப் பதிவு நடைபெற்றது.
எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை
திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்
‘வாக்கு வங்கிக்கு அடிமையாகிவிட்டது ‘இந்தியா’ கூட்டணி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வடு கிடக்கும் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா
ஹிமாசல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குருக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்
தில்லியில் வாக்கை செலுத்திவிட்டு சோனியா காந்தியுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல். ~கணவா் ராபா்ட் வதேரா, சகோதரா் ராகுல், மகன் ரைஹான், மகள் மிரய்யாவுடன் தில்லியில் வாக்களித்துவிட்டு வரும் பிரியங்கா.
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !
பயன்பாட்டாளா்களிடம் பாறையை உண்ணச் சொல்வது, பீட்சா பாலடைக் கட்டியில் (சீஸ்) ஒட்டும் பசையைக் கலக்கச் சொல்வது போன்ற கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.