يحاول ذهب - حر
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
December 12, 2023
|Dinamani Chennai
‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும்’ என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
-
மேலும், ‘ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்து மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ‘அடுத்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீா் பேரவைக்குத் தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.
அதோடு, ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசின் முடிவின் செல்லத்தக்கத்தன்மையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. இந்தச் சட்டப் பிரிவின்படி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தகவல்தொடா்பு ஆகிய துறைகளைத் தவிர மற்ற துறைகள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மாநில அரசு தாங்களாகவே தனி சட்டத்தை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஜம்மு-காஷ்மீா் அரசு தங்களுக்கென தனிச் சட்டத்தை வகுத்துக்கொண்டதோடு, தனிக் கொடியையும் வடிவமைத்துக் கொண்டது. வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது. இதில், மூன்றுவிதமான தீா்ப்புகளை நீதிபதிகள் வெளியிட்டனா்.
هذه القصة من طبعة December 12, 2023 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பேரவைத் தேர்தல்: அமமுகவினர் டிச. 10 முதல் விருப்ப மனு பெறலாம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
சாலைகளில் ரத்தக் கறை!
தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
December 02, 2025
Dinamani Chennai
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Translate
Change font size

