ஜம்மு, ஆக. 11: ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை படையினர் முறியடித்தனர்.
அப்போது பாதுகாப்புப் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப் படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் இரு தற்கொலைப்படை பயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார்.
ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது: ராஜௌரி மாவட்டத்தின் பர்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதிகள் நெருங்குவது கண்டறியப்பட் டது. மோசமான வானிலை மற்றும் அடர்ந்த புதர்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, இரு பயங்கரவாதிகள் ராணுவ முகாமை நெருங்கினர். இதையடுத்து, முகாம் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
இதனிடையே,ராணுவ முகாமை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, இரு பயங்கரவாதிகளும் உள்ளே நுழைய முயன்றனர். ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததுடன், இருவரையும் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
هذه القصة مأخوذة من طبعة August 12, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 12, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
பாலியல் குற்றச்சாட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல பாஜக
ராஜ்நாத் சிங்
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக வியாழக்கிழமை புகாரளித்தது.
ஜூனில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டம்: கொள்கைக் குறிப்புகளை இறுதி செய்யும் பணி தீவிரம்
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
'நம்ம யாத்ரி' கால் டாக்ஸி செயலி அறிமுகம்
சென்னையில் அண்ணா பல்கலை. மாணவா்களால் உருவாக்கப்பட்ட ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி (வாடகை வாகனம்) செயலி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்
பரமத்திவேலூரில் 112 டிகிரி பதிவு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
பிரதமர் மோடி குற்றச்சாட்டு