புது தில்லி, மே 17: ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டின் பொருளாதார மதிப்பு 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட் சம் கோடி வளர்ச்சி காணும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டில் உயர் அதிவேக இணைய வசதியை வழங்கும் 6ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் 2030ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின்(டிராய்) வெள்ளிவிழா நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.220 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை காணொலி மூலம் தொடக்கிவைத்தார். சென்னை ஐஐடி தலைமையில் இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பிரதமர் பேசியதாவது:
மக்களுக்கிடையேயான தொடர்பு, 21-ஆம் நூற்றாண்டுக்கான நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். அதைக் கருத்தில்கொண்டு நவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة May 18, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 18, 2022 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாட்டி வதைக்கும் வெப்ப அலை
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா்.
காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை
சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?
‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது
‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்
கனிமவள கொள்ளையைத் தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
போரூர் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு
மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.