சினிமா என்றால் என்ன என்பது போல ஒதுங்கி நின்ற அவர்கள் எல்லாம் கொந்தளித்த தருணம் ஒன்று உண்டு என்றால், அது காட் பாதர் படம் சினிமாவாக சொல்லப்பட்டபோது தான். சுலபமாக கொள்ளுவதற்கு புரிந்து நாம் நாயகன் படம் வெளிவந்த காலத்தை சொல்லலாம். கட்டுடைப்பாளர்கள் ஏறக்குறைய அறச்சீற்றம் வந்து கொந்தளித்து விட்டார்கள்.
யாரையெல்லாம் ஹீரோவாக்குவது என்கிற விவஸ்தையில்லையா என்பது அவர்கள் கேள்வி. ஒரு கிரிமினலை போக்கசில் நிறுத்தி வைத்து, நீங்க நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் வதந்தி கிளப்பிக் கொண்டிருப்பதாவது...
இந்த மாதிரி சந்தேகங்கள் இன்னமும் நிலவுகின்றன. தேசமெங்கும் நாம் வாழும் முறையில் பின்னப்பட்ட பல்வேறு கோணங்களின் ஒரு விளைவுதான் மாபியா என்பதை உணரும் மன விசாலத்தை அவர்கள் அஞ்சுகிறார்கள். அதிகாரம் யாரையாவது பழி வாங்க விரும்புகிறது என்றால், அவன் கள்ளக்கடத்தல் செய்தான் என்றோ, கஞ்சா கடத்தினான் என்றோ பழி வாங்கப்படுவதற்கு தோதாக இம்மாதிரி விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஒழித்துக் கட்டப்படுவது எல்லாம் நம்மை கடந்து போகிற வெற்றுச்செய்திகளாக முடிந்து விட வேண்டும். விசாரம் கொள்ள வேண்டிய மனித உயிர்கள் அல்ல அவை என்கிற அசட்டை.
இருந்தாலும் தமிழில் நிழல் உலகைப் பற்றி கதை சொல்லி சினிமாவில் அதன் உரிமையை நிலை நிறுத்தி விட்டார்கள் என்பது கண்கூடு. எதிர்ப்பாளர்கள் தங்களுடைய குரலை இழந்ததும் நடந்து விட்டது.
هذه القصة مأخوذة من طبعة July 2022 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 2022 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.