Maalai Express - April 20, 2025

Maalai Express - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Maalai Express
In this issue
April 20, 2025
ஈஸ்டர் பண்டிகை: தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகளில் ஈஸ்டரும் ஒன்று.

1 min
காஷ்மீரில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 3 பேர் பலி
ஜம்மு - காஷ்மீர் மாவட்டம் ரம்பன் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது.

1 min
உலகெங்கும் வெறுப்பு நீங்கி நல்லிணக்கம் செழிக்கட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு 3வது நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதன் நினைவாக இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

1 min
காலவரையறையைச் சரியாக செயல்படுத்தி சம நியாயம் கொண்ட தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்
ஆங்கில நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி
2 mins
ஆர்.என்.ரவி கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்: ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்
ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2 mins
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் விளம்பர பலகை வைக்க வேண்டும்
ஆட்சியரிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு

1 min
சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி கண் ஒளியியல் பிரிவின் மூலம் தேசிய அளவிலான கருத்தரங்கம்
விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனூர் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவின் மூலம் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

1 min
செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் |கோயில் 111ஆம் ஆண்டு தேர் திருவிழா|
புதுச்சேரி அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் ஆலய 111ஆம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min
மூளை வளர்ச்சி வேறுபாடுகள் உள்ள குழந்தைகள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மதி இறுக்கம் (மூளை வளர்ச்சி வேறுபாடுகள்) உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
2 mins
ஒட்டன்சத்திரத்தில் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நகர ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் நலச்சங்கம் தலைவர் பி.கே.சுப்பிரமணியன் தலைமையில் 23ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

1 min
கோவை மாநகர காவல் துறை ஆண்டு பவள விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி
கோவை மாநகர காவல் துறையின் 35ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு போதையில்லா கோவை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி, சைக்கிளிங் காவலர்களுக்கான போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

1 min
தவளக்குப்பத்தில் ரூ.42 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
புதுவை மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் வி.ஐ.பி., நகர், ராம்ஜி நகர், பூரணாங்குப்பம் வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் ரூ.42 லட்சத்தில் புதிய கருங்கல் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

1 min
சாலபுத்தூர் ஏரியை சீரமைக்கும் பணியை மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் நல்லான் பிள்ளை பெற்றால் ஊராட்சியில் சாலபுத்தூர் ஏரி உள்ளது இந்த ஏரியை சீரமைத்து தர கோரி அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

1 min
அதிமுகவை கண்டித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்
ஒன்றிய பாஜக அரசுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வந்து பல மாணவர்கள் உயிர் இழந்ததற்கு காரணமாக அதிமுகவை கண்டித்தும், அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்விற்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது, விவசாயி என்று கூறி விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிட ஆதரவு தெரிவித்தது, சிறுபான்மைவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது போன்ற பல்வேறு துரோகங்களை மேற்கொண்ட அதிமுக எடப்பாடியின் நடவடிக்கையை பொது மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min
அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் வேளாண்மைபுலத்தில் கல்லூரி நாள் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் புலம் சாஸ்திரி அரங்கில் வருடாந்திர கல்லூரி நாள் விழாவான ART LIT PLAY 25ஐ நடத்தியது. இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு திறமைகளும், சாதனைகளும் வெளிப்படுத்தப்பட்டன.

1 min
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்கள் மகத்தான தியாகத்தைச் செய்துள்ளனர்-அமித்ஷா பேச்சு
மத்திய உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா, 86வது சிஆர்பிஎப் எழுச்சி தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, பணியின்போது உயிரிழந்த 2,264 பாதுகாப்புப் படையினரின் தியாகத்திற்கு அஞ் சலி செலுத்தி பேசுகையில், “மிகவும் பயங்கரமான நக்சலைட்டுகள் கூட சி ஆர்பிஎப் இன் கோப்ரா பட்டாலியனைப் பார்த்து நடுங்குகிறார்கள்\" என்று பாராட்டி பேசினார்.

1 min
ராணுவத்தில் அக்னி வீரராக வாய்ப்பு |புதுச்சேரியில் 22ம் தேதி சிறப்பு முகாம்|
ராணுவத்தில் அக்னி வீரராக சேரும் திட்டத்தில் ஆட்தேர்வுக் கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் புதுச்சேரியில் நடைபெறுகிறது.

1 min
கோவில்பட்டி மாணவி தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்க தேர்வு
கோவில்பட்டி மாணவி வித்யா தேசிய அளவில் போட்டிகளில் ஈடுபட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min
வம்பாகீரப்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழ்த் தென்றல் திரு.வி.க மற்றும் வீரமாமுனிவர் அரசு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் வம்பாகீரப்பாளையம் தட்சிணாமூர்த்தி அரசு பள்ளி மாணவர்களுடன் கல்வி, கலை, கலாச்சாரம் ஆகிய வற்றைப் பகிர்ந்து கொள்வதற்காக மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min
பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மேட்டூரில் ஆட்சியர் பிருந்தாதேவி கள ஆய்வு
“உங்களைத் தேடி உங்கள் ஊரில் “திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளான நேற்று மேட்டூர் பகுதியில் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி கள ஆய்வு மேற்கொண்டார்.

1 min
“பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் \"பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்\" விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கடலூர் காவலர் நல சமூக கூடத்தில் நடைபெற்றது.

1 min
தென்காசி வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் குறித்து ஆட்சியர் கள ஆய்வு
தென்காசி, ஏப். 20தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும். தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

1 min
தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்திற் குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியரை மேற்படிப்பில் சேர்ப்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

2 mins
வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் வைப்பது தொடர்பாக நெல்லை ஆட்சியர் ஆலோசனை
திருநெல்வேலி மாவட்டம் வணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் வைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

1 min
தொழில் முனைவோருக்கு முதல்வர் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்ட ஆட்சியர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கைவினைத் தொழில் முனைவோருக்கு கடனுதவிகள் வழங்கி சிறப்புரையாற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பார்வையிட்டார்.

1 min
ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை திறந்து வைத்த முதல்வர்
தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம், தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ‘ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only