Kalachuvadu Magazine - July 2021
Kalachuvadu Magazine - July 2021
Go Unlimited with Magzter GOLD
Read Kalachuvadu along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Kalachuvadu
1 Year $4.99
Save 58%
Buy this issue $0.99
In this issue
Though a pioneer in the modern tamil poetry movement Rudrapathy popularly known as Mahakavi had not been discussed in Tamil literary environment. This issue Kalachuvadu focuses on Mahakavi with a brilliant introduction by M A Nuhmam and a selection of Mahakavi’s writings by poet Cheran. The main article of this issue is the debate on me too movement in Tamil circumstances. T Parameswari, Ma, Geetha Narayanan take part in the interviews and Burkha Dutt, T M Krishna, Parvathy Thiruvoth, Chinmayi Sreepada, Bhuvana Seshadri and Meena Kandasamy in the discussion.There were great demises this month such as K M Natarajan, a Gandhian, Sundarlal Bahuguna, the lover of trees, Mythili Sivaraman, the firebrand leftist and Siddalaingaiah, the well known Dalit writer. These personalities are paid tribute. S R Krishnamurthy writes on the Booker prize winner David Diop. Vannanilavan and Noel Nadesan present stories and Y Manikandan brings new findings in Bharati research.
கல்வித்துறையில் மாற்றங்கள் உருவாகுமா?
கொடுந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, என ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒவ்வொரு பிரிவு மாணவர்க்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு. கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல், வலைவகுப்பு தொடர்பானவை, தேர்வுகள், மேற்படிப்புச் சேர்க்கை எல்லாவற்றிலும் சிக்கல்கள். ஆசிரியர்களுக்கும் பலவிதமான பிரச்சினைகள். அவ்வப்போது எழும் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு கண்டால் போதாது. இவற்றை ஆழ்ந்து ஆராய்ந்து தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. 2020 -2021ஆம் கல்வியாண்டு முழுவதும் பலவிதக் குழப்பங்களோடு கழிந்து போயிற்று. தொற்றின் மூன்றாம் அலை பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் 2021-2022ஆம் கல்வியாண்டையாவது முறையாகத் திட்டமிட்டால் எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.
1 min
இனியாவது விதி செய்வோம்
வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? - சுந்தர ராமசாமி (சுய கல்வியைத் தேடி
1 min
போராடாமல் நீதி கிடைக்காது
பாதிக்கப்பட்ட பெண்களையும் உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல் வைரமுத்து மீதான மீரு குற்றச்சாட்டுக்களின் விளைவுகளை விரிவாக அலசுகிறது.
1 min
தேர்வுகள் சோதனைகள்
சென்ற ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வுகள் முடிந்திருந்தன, ஒருநாள் தேர்வைத் தவிர. அது பிற்பாடு சில குழப்பங்களுக்கிடையில், ஓரிரு ஒத்திவைப்புகளுக்குப் பின்னரும் சுமூகச் சூழல் கனியாததால் ரத்து செய்யப்பட்டது. பள்ளி இதர வகுப்பு மாணவர்களின் ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
1 min
காலச்சுவடும் நானும்
கோற்று கோதும் வண்ணத்துப் பூச்சி' இது என் முதல் கவிதைத் தொகுப்பு. பட்டியலில் ஊழல் கூடாது என்பதற்காக இதை ஒளிப்பதில்லை. ஆனால் என்னளவிலும் வாசகர் அளவிலும் 'உறுமீன்களற்ற நதி தான் என் முதல் கவிதைத் தொகுப்பு. இதை 2008இல் காலச்சுவடு வெளியிட்டது. இப்போது ஐந்தாம் பதிப்பாக விற்பனையில் உள்ளது.
1 min
வரலாற்றுடன் ஒரு பயணம்
உலக அளவில் கமு. நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்து கொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.
1 min
வாழ்தல் இனிது
"நமது மலைகளையும் வனங்களையும் நதிகளையும் பாதுகாப்பதில் எனக்கு முதன்மையான அக்கறை இருக்கிறது. ஏனெனில் நான் இமயத்தின் மடியில் பிறந்தவன்” இந்த வாசகங்கள் நான் பணியாற்றிய தொலைக்காட்சி நேர்காணலில் சுந்தர்லால் பகுகுணா கூறியவை. எளிய கவிதையொன்றின் வரிகளாக ஒலித்தன என்பதாலும் அவ்வாறு சொல்லவைத்த கேள்வி என்னுடையது என்பதாலும் வாசகங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் தங்கியிருக்கின்றன. அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் முதலில் அகத்தில் எதிரொலித்தவை இந்த வாசகங்கள் தாம்.
1 min
கி.ரா.வின் ஆப்த நண்பர்
தமிழருக்குத் தமிழே துணை' என்னும் மந்திரத்தைத் தமிழர்களுக்குச் சொன்ன ரசிகமணியின் பேரனும் கி.ரா.வின் ஆப்த நண்பருமான தீப. நடராஜன் கடந்த 22.05.2021 அன்று காலமானார். ரசிகமணி டி.கே.சி.யின் புதல்வர் தெ.சி.தீத்தாரப்பன் என்ற செல்லையா முத்தம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 20.06.1933 அன்று பிறந்தவர் தீப. நடராஜன். ரசிகமணியின் பேரன் அவர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறபோது அவரது தந்தை பற்றியும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.
1 min
தேடலில் பிறந்த அர்ப்பணம்
சென்னை மாநிலக் கல்லூரி; 1956ஆம் ஆண்டு; மேல் தளத்தில் இருக்கும் மாணவியரின் அறை; உள்ளிருக்கும் தேவிகளின் தரிசனத்திற்காக எந்நேரமும் வராந்தாவில் அலைந்து கொண்டிருக்கும் மாணவரின் கண்களில் படாமல் இருப்பதற்காக எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும் அறையின் கதவுகளைத் தள்ளித்திறந்து கொண்டு, கொடி போன்ற பதினேழு வயதுப் பெண் நுழைகிறாள்
1 min
நட்பார்ந்த கைகளும் புன்னகையும்
1982 இல் கர்நாடகத்தில் ஹொஸ்பேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்குக் காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்தி வந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார்.
1 min
Kalachuvadu Magazine Description:
Publisher: Kalachuvadu Publications
Category: Politics
Language: Tamil
Frequency: Monthly
Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only