Dinamani Tiruppur - April 19, 2025

Dinamani Tiruppur - April 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 19, 2025
தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை
மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.
1 min
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா ஏப். 30-இல் தொடக்கம்
சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் விழா ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை
கோத்தகிரி அருகே உள்ள சோலூர் பிக்கை கண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
பெருந்துறை நல அறக்கட்டளைக் கூட்டம்
பெருந்துறை நல அறக்கட்டளை உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
புனிதவெள்ளி: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈரோட்டில் புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
1 min
சாலை விபத்து: இளைஞர் உயிரிழப்பு
குன்னூரில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு
ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடை காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பி வைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
1 min
அமைச்சர் பொன்முடியை கண்டித்து பெருந்துறையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ஹிந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பவானிசாகரில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கூட்டம்
பவானி சாகர் ஒன்றிய 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
கூடலூர் நீதிமன்றம் சார்பில், ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருப்பூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு
திருப்பூர், அவிநாசியில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை, திருச்சிலுவை ஆராதனையுடன் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுசரித்தனர்.
1 min
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
சேவூர் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
1 min
இருசக்கர வாகனம் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தார்.
1 min
பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு
குன்னத்தூர் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min
உர மூட்டைகளை திருடிய 2 பேர் கைது
பல்லடம் அருகே வேலப்பகவுண்டம் பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மூலனூரில் ரூ.1.55 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.55 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
1 min
வெள்ளக்கோவிலில் சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது
வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்த சிறுவனை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பொங்கலூர் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி
பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி மேற்கொண்டனர்.
1 min
பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி மோசடி: தம்பதி கைது
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்த ஹைதராபாதை சேர்ந்த தம்பதியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை
தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.
1 min
வீடு புகுந்து முதியவரின் கழுத்தை அறுத்த இளைஞர்: பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு
வீடு புகுந்து பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
மருதமலை மலைப் பாதையில் கிருத்திகை, சஷ்டியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாள்களில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்
தம்பதி மீது போலீஸில் புகார்
1 min
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
சத்தியமங்கலம், ஏப். 18: தாள வாடி அருகே மின்தடையை சரி செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தில்லி, ஜங்புரா மதராசிகேம்ப்பில் 400-க்கும் மேற்பட்ட தமிழர் குடியிருப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பாஜக அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுப்பர்பாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவர் கைது
திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
மதுரையில் வறுமையின் காரணமாக விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர்.
1 min
ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினர் 'சீல்'
சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைக்கேடு தொடர்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்
தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்
சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
1 min
மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2-ஆவது நாளாக திறப்பு
தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்
1 min
கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு
கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
1 min
குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
1 min
தூண்டப்பட்ட கலவரம்!
மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்பது சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2 mins
தரமான கல்வி... வளமான வாழ்வு!
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
3 mins
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
2 mins
ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
நியோமேக்ஸ் மோசடி: ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
1 min
மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
1 min
நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை
'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்
'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
1 min
ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?
மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.
1 min
12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு
இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
1 min
உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
1 min
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்
மத்திய அமைச்சர் தகவல்
1 min
தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்
நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
1 min
தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்
விதிமுறைகளில் திருத்தம்
1 min
3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
1 min
வணிகர்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
வணிகர்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.
1 min
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
1 min
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு
அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
1 min
முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
1 min
அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.
1 min
'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
டிம் டேவிட்டால் மீண்ட பெங்களூர் 95/9
பலத்த மழையால் தாமதம், 14 ஓவர்களாக குறைப்பு
1 min
இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷி யோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜன நாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.
1 min
பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.
1 min
19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது
பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிமாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்
தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
1 min
உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்சவம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது.
1 min
ஈரோடு உள்பட 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19,20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.
1 min
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1 min
தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்
தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min
2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only