Dinamani Tirunelveli - March 11, 2025

Dinamani Tirunelveli - March 11, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 11, 2025
பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
2 mins
இளைஞர் மீது தாக்குதல்: 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
சாலை விபத்து: இளைஞர் பலி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச் சாலையில் பைக்கும், அடையாளம் தெரியாத வாகனமும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
1 min
பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.ராபர்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
1 min
நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி அருகே விவசாயி தலைத்துண்டித்து கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
சங்கர் பாலிடெக்னிக்கில் மகளிர் தின விழா
தாழையூத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
1 min
ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
தென் காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
1 min
இளம்பெண்ணின் நகை திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
தச்சநல்லூர் சிவன் கோயிலில் மார்ச் 16இல் கும்பாபிஷேகம்
தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.39.46 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.39.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
முகசந்தி விநாயகர் கோயிலில் மார்ச் 17இல் பாலஸ்தாபனம்
பாளையங்கோட்டை மேலரதவீதியில் உள்ள அருள்மிகு முகசந்தி விநாயகர் கோயிலில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் பாலஸ்தாபனம் மார்ச் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 min
புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளிக்கு பசுமை தொழில்நுட்ப விருது
எக்னாமிக் கல்வி குழுமம் சார்பில் பசுமைத் தொழில்நுட்ப விருது பாளை யங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min
தீ விபத்தில் காயமுற்றவர் உயிரிழப்பு
திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
நெல்லையில் நூல்கள் வெளியீட்டு விழா
கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி எழுதிய 'மறைவேது உனக்கு மன்னவா!', 'அரண்மனை நகரில் அமுதத் தமிழ்' ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா திருநெல்வேலி கோடீஸ்வரன் நகர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
1 min
மேலவாசல் முருகன் கோயிலில் மூலவர் பாலஸ்தாபன விழா
பாளை யங்கோட்டையில் உள்ள மேல வாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் பாலஸ்தாபன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
ஆயன்குளத்துக்கு பேருந்து வசதி வேண்டும்
ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு
1 min
மாதிரி நீதிமன்றப் போட்டி: 'சாஸ்த்ரா' பல்கலை. வெற்றி
சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது.
1 min
குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு
கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
1 min
கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு
தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணி யாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை
4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி யும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை: திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்
வங்கிகளில் நகை அடகு வைப்பது குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
125 இடங்களில் திமுக போராட்டம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை
அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.
1 min
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
2 mins
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
3 mins
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை
தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.
1 min
குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்
1 min
மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு
மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு
1 min
ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
போலி வாக்காளர் அட்டை விவகாரம்
1 min
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கி சோதிக்கப்பட்டது.
1 min
திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி
மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.
1 min
லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து
நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
1 min
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min
ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
1 min
குஜராத்தை வென்ற மும்பை
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
1 min
மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
1 min
மாருதி விற்பனை 1,99,400 ஆக உயர்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.
1 min
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறார்.
1 min
கிரீன்லாந்தில் இன்று தேர்தல்
டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.
1 min
அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்
தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
1 min
திருச்செந்தூர்: வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா வந்த சுவாமி சண்முகர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா எட்டாம் நாளான திங்கட்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
1 min
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவை
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min
சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்
சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்' என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
1 min
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only