Dinamani Thanjavur - May 13, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2 mins

சேரனூரில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட சேரனூர் ஊராட்சிக்கு, அதன் தலைமையிடமான சேரனூரிலேயே ஊராட்சி மன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

1 min

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 14) மின் விநியோகம் இருக்காது.

1 min

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

பொன்னமராவதியில் முத்தமிழ்ப் பாசறையின் 16-ஆவது இலக்கிய விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 16-ஆவது ஆண்டு இலக்கிய விழா மற்றும் முழு நிலவு சிலம்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பாலைவனநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் தீர்த்தவாரி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சுவாமிமலை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தஞ்சாவூர் கரந்தை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அதிமுக கரந்தை பகுதி கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

பொன்னமராவதி அருகே நூல் வெளியீட்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன் பட்டியில் வீதியில் தவழும் விதை கள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

உலக செவிலியர் தின விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் சர்வதேச செவிலியர் தின விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம்

நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

புதுக்கோட்டை மச்சுவாடி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ குழந்தை முத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தினர், கட்டுநர் சங்கத்தினர், கட்டுமானத் தொழிலாளர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கந்தாவகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கந்தர்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

1 min

அன்னவாசல் அருகே புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

அன்னவாசல் அருகே புதிய பகுதி நேர நியாய விலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

1 min

கறம்பக்குடி அருகே கோயிலில் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் ஒன்றரை பவுன் தங்கநகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

1 min

தொழிற்சங்க கூட்டமைப்பு விளக்கக் கூட்டம்

மத்திய அரசை கண்டித்து மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்த விளக்கக் பொதுக்கூட்டம் விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அதிமுக பொதுச் செயலர் பிறந்த நாள் விழா

பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 71-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கும்பகோணத்தில் திமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்

கும்பகோணத்தில் திங்கள்கிழமை திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பொதுமக்களிடம் வழங்கினார்.

1 min

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை-மகன் கைது

தஞ்சாவூர் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

உலக செவிலியர் தின விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் சர்வதேச செவிலியர் தின விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

1 min

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தேரோட்டம்

பேராவூரணி, மே 12: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியிலுள்ள ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min

பேராவூரணி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

பேராவூரணி வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்குகிறது.

1 min

தஞ்சை குறைதீர் நாள் கூட்டத்தில் 2 பேருக்கு ரூ. 21.16 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் இருவருக்கு ரூ. 21.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

1 min

செய்திச் சுருள் புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வழங்கினார்.

1 min

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கியது ஹெலிகாப்டர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள் கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது.

1 min

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உள்பட 6 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.

1 min

நகைக்காக கொன்ற வடமாநில இளைஞர் கைது

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டி யால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது

பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மகளை கொலை செய்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

1 min

பாஜக நிர்வாகி வேலூர் இப்ராகிம் கைது

மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலர் வேலூர் இப்ராகிமை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனர்.

1 min

சென்னையில் மின்சார ரயில் மோதியதில் பெரம்பலூர் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற பெரம்பலூரைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.

1 min

புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min

தண்டவாளத்தில் கற்கள் வைத்த வட மாநிலத்தவர் கைது

அரக்கோணம், திருவாலங்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் போல்ட்டுகளை வைத்த நபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

1 min

ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயர்நீதிமன்றம்

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1 min

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.

1 min

உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

1 min

இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் கெடு

கும்பகோணத்தில் உள்ள கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால், கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

3 mins

மனமது செம்மையானால்...

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

2 mins

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

2 mins

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு

தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

1 min

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

1 min

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

1 min

சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

1 min

சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

1 min

பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை

இந்திய விமானப் படை

1 min

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு

பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

1 min

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1 min

ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை 30 முதல் 80 சதவீதம் வரை குறைக்கும் நிர்வாக உத்தரவில் கையொப்பமிடும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தால் இந்தியா போன்ற நாடுகளில் மருந்துகளின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1 min

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.

1 min

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

1 min

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்

அரசியல் கட்சிகள் கண்டனம்

1 min

நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு

குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1 min

விடைபெற்றார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி

மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் கெளஃப், பாலினி

இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min

இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி

சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்: எல்ஐசி அறிமுகம்

செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

1 min

யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு

பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.

1 min

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

1 min

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

1 min

துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1 min

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.

1 min

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் மே 14 முதல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

1 min

திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

1 min

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

பௌர்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமார் 60 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

1 min

திருச்சி உள்பட 14 இடங்களில் வெயில் சதம்

திருச்சி உள்பட 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

1 min

குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only