Dinamani Tenkasi - May 06, 2025Add to Favorites

Dinamani Tenkasi - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கவுள்ளது.

1 min

ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

களக்காட்டில்...

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, களக்காடு மணிக்கூண்டு திடலில் பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தென்காசியில் பாஜக ஆர்ப்பாட்டம்

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து, தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

புளியம்பட்டியில் புதிய மின்மாற்றி திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியில் புதிய மின்மாற்றி இயக்கிவைக்கப்பட்டது.

1 min

மூலைக்கரைப்பட்டி அருகே பெண் மீது தாக்குதல்: இளைஞர் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே சொத்து தகராறால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளம்பெண் ணைத் தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கடையம் அருகே குளத்தில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள குளத்தில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

தென்காசி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 534 மனுக்கள்

தென்காசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 534 மனுக்கள் பெறப்பட்டன.

1 min

குருவிகுளத்தில் பாஜக பூத் கமிட்டி, உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டம்

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் பாஜக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சுரண்டையில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

சுரண்டையில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

1 min

வங்கியில் பணம் செலுத்தச் சென்றபோது சம்பவம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிலைய ஊழியரைத் தாக்கி ரூ.36 லட்சம் பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே வங்கியில் செலுத்துவதற்கு கொண்டுசென்ற ரூ.36 லட்சத்தை பெட்ரோல் நிலைய ஊழியரிடமிருந்து பறித்து சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

பிரேத பரிசோதனைக்கு தாமதம்; கடையநல்லூரில் சாலை மறியல்

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

நெல்லையில் மே 8இல் கிழக்கு மாவட்ட திமுக கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை (மே 8) நடைபெற உள்ளது.

1 min

களக்காட்டை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்

அதிருப்தியில் மக்கள்

1 min

பொதிகைத் தமிழ்ச் சங்க பாராட்டு விழா

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் வார விழா பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வள்ளியூர் முருகன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அருள்மிகு முருகன் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பொடியனூரில் கபடி போட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி திமுக சார்பில் பொடியனூரில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

1 min

அழகப்பபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

அம்பாசமுத்திரம், மே 5: கடையம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் மடம் ஊராட்சி அழகப்பபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து தொடங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், கால நிர்ணயம் செய்து திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார்.

1 min

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த செயல்விளக்கப் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

படகில் சென்ற மீனவர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் படகில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது

தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

விவசாயியிடம் லஞ்சம்: பாசன உதவியாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, பாசனக் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித் துறை அலுவலக பாசன உதவியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

நாகர்கோவிலில் தொழில் உரிமம் இன்றி செயல்பட்ட கடைக்கு சீல்

நாகர்கோவிலில் தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட கடையை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?

மத்திய அரசுக்கு க. கிருஷ்ணசாமி கேள்வி

1 min

தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநாடு

தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில், 2-ஆவது மாநில மாநாடு வணிகர் நல பாதுகாப்பு மாநாடாக திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் 18 ஆவது நாளாக தொடர் போராட்டம்

மின் உற்பத்தி பாதிப்பு

1 min

கைப்பேசி கோபுரம் அமைத்து தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: தில்லியைச் சேர்ந்த 2 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவரிடம் கைப்பேசி கோபுரம் அமைத்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.11.15 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தில்லியைச் சேர்ந்த 2 பேரை மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி. செல்வகுமார் நிதியுதவி வழங்கினார்.

1 min

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றார் பால் வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ்.

1 min

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு

எடப்பாடி பழனிசாமி உறுதி

1 min

வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரவுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

காவலருக்கும் ஓய்வு தேவை!

வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2 mins

பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!

பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.

1 min

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

1 min

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

1 min

அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

1 min

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்

ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை

1 min

இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை

ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

1 min

எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.

1 min

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

1 min

பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.

1 min

ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.

1 min

புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min

வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

1 min

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

1 min

கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு

உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

1 min

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

செய்திகள் சில வரிகளில்...

பெங்களூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பி.டி. தீபக் லோஹியா நினைவு கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5-0 என இலங்கையை முழுமையாக வென்று சாம்பியன் ஆனது.

1 min

ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1 min

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"

உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min

கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

1 min

வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை!

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தது.

1 min

மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

1 min

‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.

1 min

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only