Dinamani Karur - April 26, 2025Add to Favorites

Dinamani Karur - April 26, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 26, 2025

அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.

1 min

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

1 min

பெரம்பலூர் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 3 கிலோ புகையிலைப் போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கோவை-நாகர்கோவில் ரயில் பகுதியாக ரத்து

திண்டுக்கல்லில் ரயில் தண்டவாளத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்ரல் 26), ஏப். 29-ஆம் தேதியும் கோவையில் இருந்து இயக்கப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

1 min

தா.பழூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்த காரணத்தினால் நெடுஞ்சாலை துறை சார்பில் ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் ராஜா, தாசில்தார் சம்பத் ஆகிய தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கணவரின் சொத்தைப் பிரித்து தரக்கோரி 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி

பெரம்பலூர் அருகே, கணவருக்குச் சொந்தமான சொத்தைப் பிரித்துத் தர மறுப்பதோடு, வீட்டையும் காலி செய்யக் கூறி வற்புறுத்தும் தனது கணவரின் சகோதரர்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியர் அறை முன் தனது 2 மகள்களுடன் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி வெள்ளிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

1 min

பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை

பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 2024-25ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பெரம்பலூர் நகர்ப் பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு

நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் குரும்பலூர், ஈச்சம்பட்டி மற்றும் வடக்குமாதவி ஆகிய பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க பயனாளிகளின் வீடுகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்களை அனுப்பி வைக்கலாம்

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மா.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

1 min

சித்திரை தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

1 min

அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தீயில் கருகி 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் பலி

பெரம்பலூர் அருகே மக்காச்சோள வயலில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்ட தீ, ஆட்டுப் பட்டிக்கு பரவியதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

1 min

கடுகூரில் உலக மலேரியா தின விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கோடாலி கருப்பூர் மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் வடக்குத் தெருவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

1 min

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

அகரம் சீகூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

குன்னம் வட்டம், அகரம் சீகூர் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 26) மின்சாரம் இருக்காது.

1 min

ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன பயணம்

கரூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த ராணுவ வீரர்களின் இருசக்கர வாகன குழுவுக்கு காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்பத்தில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாநில கிரிக்கெட் போட்டியில் சூலூர் பள்ளி அணிக்கு வெற்றி

பெரம்பலூரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான 54 ஆவது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சூலூர் பள்ளி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

1 min

வெயிலுக்கு காயும் துவரைக்கு உரிய நிவாரணம் தேவை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

வெயிலுக்கு காயும் துவரைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min

வருவாய்த் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

தனியார் அமைப்பை தொடங்கியதாக புகார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை

விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

1 min

ஆழியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாற்றில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

திசையன்விளை அருகே மது கொடுத்து குழந்தையை கொன்ற தாய் உள்ளிட்ட 4 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இரண்டரை வயது குழந்தைக்கு மதுபானம் கொடுத்து கொலை செய்தது தொடர்பாக தாய் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் நாச வேலை: ரயிலை கவிழ்க்க சதி

அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேடுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

1 min

திருச்சியில் திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயம் வடமாநில ஊழியர்கள் இருவர் கைது

திருச்சியில் நகராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயமானது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

இரிடியம் விற்கும் கும்பலுக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 12 பேர் கைது

கரூரில் ரூ. 15 லட்சம் கேட்டு வீட்டுமனை விற்பனை தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் இரிடியம் விற்கும் கும்பலுக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 12 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

2 mins

ஜூலை 12-இல் குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

1 min

காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்காக காங்கிரஸ் மௌன ஊர்வலம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தங்கத்தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்

அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

1 min

உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு: 5 பேர் காயம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது நல்லதல்ல

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது நல்லதல்ல என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

1 min

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

விளையாட்டல்ல வயது மோசடி!

விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.

2 mins

ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!

ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?

2 mins

இனி முதலீடு... தங்கத்தில்!

துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.

3 mins

14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

1 min

முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா

பேரவையில் அமைச்சர் தகவல்

1 min

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்

அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

1 min

சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்

20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு

1 min

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு

தொழில் துறை அமைச்சர்

1 min

தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min

துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்

நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி கள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

1 min

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.

1 min

திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்

உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்

1 min

57 டன்ன தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்

2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டன்ன தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.

1 min

தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

2 mins

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

1 min

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை

ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.

1 min

எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி

ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி

1 min

சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.

1 min

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

1 min

ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ரயில் மூலம் சென்னை திரும்பிய 48 தமிழர்கள்

ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினர்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.

1 min

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.

1 min

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்

காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.

1 min

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

1 min

ஸ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only