Dinamani Karur - April 23, 2025

Dinamani Karur - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1 min
யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு
ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு
1 min
தங்கம் விலை பவுன் ரூ.74,320
ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு
1 min
முதலமைச்சர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மாநில விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலைத் துறை மதுரை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை: கரூர் எஸ்.பி.
சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா.
1 min
பெரம்பலூர் தனியார் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் அகற்றம்
பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை (ஏர் ஹாரன்) வட்டாரப் போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
1 min
ஏப்.25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
1 min
ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நலவாரிய ஓய்வூதியதாரர்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி
அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
1 min
ஆண்டிமடத்தில் நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் சிஐடியு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ரயில் நிலையத்தில் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கும் முகாம்
அரியலூர் ரயில் நிலையத்தில், மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பயணிகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
விளையாட்டு விடுதியில் சேர விண்ணபிக்கலாம்
பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மே 5-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெயங்கொண்டத்தில் நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குடும்பத் தகராறில் விஷம் குடித்த தொழிலாளி பலி
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
பாளையம் கிராமத்தில் புனித செபஸ்தியார் திருவிழா
பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் புனித செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
இயற்கை வளங்களைப் பாதுகாக்க வன அலுவலர் வலியுறுத்தல்
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட என்றார் அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்.
1 min
ரயிலில் கணவருடன் பயணித்த கரூர் பெண் சடலமாக மீட்பு
திருச்சிக்கு கணவருடன் ரயிலில் வந்த கரூர் பெண் சடலமாக தண்டவாளப் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
1 min
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!
ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.
3 mins
போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்
உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச அனுமதி மறுப்பு
மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
1 min
தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம்
தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
செய்திக் கதம்பம் ஜம்முவில் பாதித்த தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
1 min
தீவிரவாத தாக்குதல்: உதவி எண்கள் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகவல்களைப் பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min
ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ரயில் என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி அமைக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
1 min
காட்டு யானை தாக்கி பெண் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு
கூடலூரை அடுத்ததுள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் அஞ்சல் ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
இளம்பெண் வெட்டிக் கொலை: கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்
சூலூர் அருகே மாட்டுக்கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.
1 min
இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
1 min
பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் வெளியிட்ட சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் பரவி வரும் அவதூறு காணொலிகளை (விடியோ) நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
1 min
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு
நடுவானில் சிறப்பு கௌரவம்
1 min
பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவர் தேவை
லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு
1 min
சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
1 min
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு கேரளத்துக்கும் பொருந்துமா?
ஆராய உச்சநீதிமன்றம் முடிவு
1 min
ஆர்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி.ரவிசங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாது
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.
1 min
சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு
பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min
சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்
பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.
1 min
ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்:
டாம் பிட்காக்
1 min
உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்
உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
1 min
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
1 min
பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min
அறிவியல், தொழில்நுட்பத்தால் புதிய வகை மனித உரிமைகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
கீழப்பெரும்பள்ளத்தில் ஏப். 26-இல் கேது பெயர்ச்சி விழா
பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26-ஆம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
1 min
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
1 min
திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவானது.
1 min
குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
1 min
மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் தூங்கிய காட்டு யானை
முதுமலை புலிகள் காப்பக எல்லைக்கு உள்பட்ட சிங்காரா மின் வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள புல்வெளியில் படுத்து தூங்கியது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only