Dinamani Karaikal - May 06, 2025

Dinamani Karaikal - May 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 06, 2025
போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை
எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை
நீதிபதி யஷ்வந்த் வர்மா (படம்) வீட்டில் கட்டுக்கட டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.
1 min
பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்குகிறது.
1 min
ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 332 மனுக்கள் அளிப்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பெண்ணைத் தாக்கிய இளைஞர் கைது
மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
திருவாரூர், மயிலாடுதுறையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, திருவாரூர், மயிலாடுதுறையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
திருவாரூர்: ஜமாபந்தி இன்று தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
குறுவை சாகுபடி: ஏக்கருக்கு ரூ. 15000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்
குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூர் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்து கொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்கொள்ளையர்களால் நாகை மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செருதூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 254 மனுக்கள்
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 254 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
திருவெண்காடு கோயில் அரசமரம் முறிந்தது
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நூற்றாண்டுகள் பழமையான அரசமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது.
1 min
ஹஜ் யாத்திரை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை
தமிழக முதல்வருக்கு ஹஜ் சங்கத் தலைவர் நன்றி
1 min
நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.
1 min
கோரை வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி
சீர்காழி அருகே கோரை வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1 min
மயிலாடுதுறை: 222 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடியில் நலத்திட்ட உதவி
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்
1 min
வணிகர் தினம்: சீர்காழி, கொள்ளிடத்தில் கடைகள் அடைப்பு
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் வணிகர் தினத்தை யொட்டி திங்கள்கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட்டன.
1 min
பொதுவிநியோக கட்டடம்; அமைச்சர் திறந்து வைத்தார்
நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்ட 2 பொது விநியோக கட்டடங்களை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
1 min
தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்
காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.
1 min
புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்
வெ.வைத்திலிங்கம் எம்.பி.
1 min
பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவர் ஆய்வு
காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
1 min
கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு
காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
1 min
சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்காலில் வேளாண் திருவிழா
காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை வேளாண் திருவிழா காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
1 min
குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு, பூம்புகார் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
1 min
அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு
அகத்தியருக்கு சிவபெருமான் தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்
வேதாரண்யத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கினர்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கு விற்பனையானது.
1 min
காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை; 4 பேர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
1 min
வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை!
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தது.
1 min
சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
நயினார் நாகேந்திரன்
1 min
விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்
மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
1 min
அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமி உறுதி
1 min
பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்துவைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.
1 min
பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!
பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.
1 min
காவலருக்கும் ஓய்வு தேவை!
வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
2 mins
மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்
வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
1 min
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
1 min
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.
1 min
அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
1 min
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்
அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்
1 min
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி
ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை
2 mins
எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.
1 min
இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை
ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
1 min
ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு
1 min
ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு
'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.
1 min
புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min
வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
1 min
ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு
உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு
1 min
ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்
கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
1 min
காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
1 min
பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min
உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"
உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min
கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்
பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
1 min
தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்
தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
1 min
‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சூறைக்காற்று: வாழை மரங்கள், மின்கம்பங்கள் சேதம்
சீர்காழியில் 84.6 மி.மீ. மழை பதிவு
2 mins
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only