Dinamani Kanchipuram - April 30, 2025

Dinamani Kanchipuram - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Kanchipuram
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 30, 2025
முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி
பஹல்காம் பதிலடி தாக்குதல்
2 mins
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை
'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்
'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
திருத்தணி முருகன் கோயில் கிருத்திகை விழா
திருத்தணி முருகன் கோயிலில்கிருத்திகை விழாவையொட்டிதிரளான பக்தர்கள் மூலவர், உற்சவரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
1 min
வேதகிரீஸ்வரர் கோயில் தேர்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
திருக்கமுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
1 min
வீராசன மலர் அலங்காரத்தில் வல்லக்கோட்டை கோடையாண்டவர்
சித்திரை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவர் கோடையாண்டவர் வீராசன மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
1 min
காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய பீடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா
காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்
1 min
செங்குன்றம் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா
செங்குன்றம் அடுத்த பவானி நகர் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது.
1 min
ஆண்டார்குப்பம் முருகன் கோயில் சித்திரை கிருத்திகை விழா
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாகம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 min
சாலை விபத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணவர் உயிரிழப்பு
அச்சிறுப்பாக்கம் அருகே மோட்டார் பைக் மீது கார் மோதியதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணவர் உயிரிழந்தார்.
1 min
போக்ஸோவில் இளைஞர் கைது
திருத்தணி அருகே லட்சுமாபுரம் கிராமத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1 min
சிறார் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணர்வு
குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 min
கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பரிசளிப்பு
கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கால்நடை உதவி இயக்குநர் ச.தாமோதரன் பரிசுகளை வழங்கினார்.
1 min
குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 30 பேர் கைது
குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
1 min
சிறுமியை கொன்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர் தாயார் கொலை வழக்கில் விடுவிப்பு
குன்றத்தூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தஷ்வந்த், அவரது தாயார் கொலை வழக்கிலிருந்து செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
1 min
பைக்கில் சென்ற இளைஞர் மாடுகள் முட்டி படுகாயம்
ஆவடியில் சாலையில் மாடுகள் சண்டையிட்டு மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலத்த காயம் அடைந்தார்.
1 min
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
1 min
மனைவி, மகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
திருவள்ளூர் அருகே மனைவி, மகனை கொலை செய்து விட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த நபரை தனியார் தொழிற்சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழிற்சாலையின் கரி துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் கார்பன் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளிவந்த கரித்துகள்களால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப் பகுதிகள் அசுத்தமடைவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது
உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
கட்டாயக் கடன் வசூலுக்குத் தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1 min
ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழை தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்
வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினர் மற்றும் அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது
மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளைக் குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சி சாட்சி
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தவிர்க்க அதிமுக வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கான இறப்புச் சான்றுகளை அதிகாரிகளே சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
1 min
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
மதுரை தனியார் மழலையர் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
1 min
சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தண்ணீர்த் தொட்டியில் வீசி இரு மகன்களை கொன்ற பெண் கைது
வாழப்பாடி அருகே பெண் தனது இரு மகன்களையும் தண்ணீர்த் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
1 min
காவல் உதவி ஆய்வாளர்கள் 245 பேருக்கு பதவி உயர்வு
தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர்கள் 245 பேர், ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
1 min
தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் மேல் முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது.
1 min
அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு பாதுகாப்பு கேள்விக்குறி
தணிக்கை அறிக்கையில் தகவல்
1 min
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு உத்தரவு
முறைகேடு மற்றும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் துணைவேந்தரைக் கைது செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.
1 min
வாழையடி வாழையென...
காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.
2 mins
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
1 min
511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
1 min
வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்
தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து
நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.
1 min
5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min
பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப் பயணி எடுத்த விடியோ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப் லைனில் பயணித்தவாறு அகமதாபாத் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை: துருக்கி
இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பி வைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்
ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்
1 min
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
1 min
வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் சட்டத்துக்கு எதிராக 'விளக்கு அணைக்கும்' போராட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
கனடாவில் இந்திய மாணவி சடலமாக மீட்பு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநர் ஒப்புதல்
கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது வாக்காளர்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிர்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்' என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
1 min
ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
மத்திய வர்த்தக அமைச்சகம்
1 min
கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்
நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.
1 min
சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
1 min
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி
5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.
2 mins
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
டெல்லியை வென்றது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
4% சரிந்த பிபிசிஎல் வருவாய்
மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'
ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு
சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
யூகோ வங்கி நிகர லாபம் ரூ.652 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.652.43 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.
1 min
பவுன் ரூ. 72 ஆயிரத்தை நெருங்கியது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 71,840-க்கு விற்பனையானது.
1 min
நெல்லையப்பர் கோயிலில் நடனமாடி ‘ரீல்ஸ்’
சைபர் கிரைம் போலீஸில் புகார்
1 min
உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
1 min
இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள்
அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக்கடைகள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.
1 min
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா சாகை வார்த்தலுடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.
1 min
‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1 min
பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழாத வகையில், அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
Dinamani Kanchipuram Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only