Dinamani Kanchipuram - April 28, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு

தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

திருவேற்காட்டில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

திருவேற்காட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

1 min

அம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் கற்கள்: ரயிலைக் கவிழ்க்க சதி

அம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் கற்களைக் கொட்டி ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றது.

1 min

மேல்மருவத்தூரில் சித்திரை அமாவாசை வேள்வி பூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் சித்திரை மாத அமாவாசை வேள்விபூஜையை ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.

1 min

காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் ஏப். 30-இல் இளைய மடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கவுள்ளார்.

1 min

அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1 min

தெரேசாபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தத்தனூர்-பேரீஞ்சம்பாக்கம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min

போக்குவரத்துக் கழக ஊழியர் வாரிசுகளுக்கு நியமன ஆணை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) அனைத்து மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல், மதுராந்தகம் பணிமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்

கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021-22-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், ரூ.12.74 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த, 2022-ம் தொடங்கப்பட்டன.

1 min

வீரராகவர் கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

சித்திரை அமாவாசை நாளையொட்டி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞர் கைது

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தர்னா

மதுராந்தகம், ஏப். 27: செய்யூர்-வந்தவாசி சாலையில், ரயில்வே இருப்புபாதையை கடக்கும் இடத்தில் நிதி ஒதுக்கியும் மேம்பாலம் கட்டப்படாமல் இருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

1 min

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

போதை மாத்திரைகள் கடத்திய 4 இளைஞர்கள் கைது

ஆந்திரத்தில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மின் பற்றாக்குறையை தவிர்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்

திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min

மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என நிர்வாகிகள் யுவராஜ், செல்ல ராசாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 min

சாரணர், சாரணியர் இயக்க திருவள்ளூர் மாவட்ட தலைமையகம் திறப்பு

திருவள்ளூர் அருகே சாரணர், சாரணியர் இயக்கத்தின் மாவட்ட தலைமையக திறப்பு விழா சதுரங்கபேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1 min

நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

1 min

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

இதற்கொரு முடிவே கிடையாதா?

சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

2 mins

உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!

உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

2 mins

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

முனைவர் பா.இறையரசன்

2 mins

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்

தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

2 mins

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தகர்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.

1 min

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

1 min

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

1 min

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1 min

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்

மத்திய அமைச்சர் புரி உறுதி

1 min

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பயங்கரவாதக் கட்டமைப்பை காங்கிரஸ் இன்னமும் ஆதரிக்கிறது

பாஜக குற்றச்சாட்டு

1 min

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்: மீட்க வந்தவர் உள்பட 12 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேன், பின்னர் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

1 min

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

1 min

புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்

7-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சார்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.

1 min

மும்பை 6-ஆவது வெற்றியுடன் முன்னேற்றம்

ஐபிஎல் போட்டியின் 45-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

பார்சிலோனா

மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min

சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

1 min

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை

வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்

1 min

தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்

சர் பிட்டி தியாகராயரின் 174- ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

சென்னை திரும்பினார் ஆளுநர்

உதகையில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டிருந்ததற்கு ஒருநாள் முன்னதாகவே சென்னைக்குத் திரும்பினார்.

1 min

விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்!

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு (ஏப்.30) நகை வாங்க பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

1 min

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக கோடை அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only