அதிலும் சினிமாவில் தந்திரக் காட்சிகள் வந்த பின் புராண இதிகாசக் கதைகளின் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்தது என்று சொல்லலாம்.
1940 வாக்கில், ஏழு வகை திரைக்கதைகளில் ஒன்றான இரட்டை வேடக் கதைகள் படமாகத் தொடங்கியது தமிழில் பி.யு சின்னப்பா நடித்த உத்தம் புத்திரன் இந்திய அளவிலேயே இதில் முதல் என்று சொல்லலாம். தந்திரக் காட்சியாக அவற்றைப் படம் பிடிக்க வேண்டியது வந்த போது கதாநாயகன் போல உருவ அமைப்பு உள்ளவர்களின் தேவை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.கொக்கோ என்று ஒரு நடிகர் உண்டு. என் தலைமுறைக்கும் முந்தியவர். பெரிய சாண்டோ. வீர தீரக் காட்சிகளுக்குப் பேர் பெற்றவர். 'ஏல, எஸ். எஸ். கொக்கோ ரெண்டு ட்ரெயின் ஓடிக்கிட்டிருந்தா ரெண்டையும் சேர்த்து ஒரே தாவா தாவிருவாரு தெரியுமா...' என்று எங்கள் சின்னவயதில் அவரது பிரலாபத்தைப் பேசக் கேட்டதுண்டு. அது சும்மா வதந்திதான். ஆனால் அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நடிகர்கள் 1944 இல் இருந்தார்கள். பத்தே ஆண்டுகளில் அந்த நிலைமை மாறி விட்டது.
கதநாயக, நாயகிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து உண்டாகி அவரைப் படம் முடியும் மட்டும் பத்திரமாக வைக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கும் நாயக நாயகியருக்கும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் 1958இல் சீர்காழியில் நடந்த அவரது நாடகத்தில், வழக்கம் போல நடிகர் குண்டுமணியைத் தூக்கி அடிக்கும் காட்சியில் கால் முறிந்து படுக்கையில் இரண்டு மாதங்கள் வரை கஷ்டப்பட்டார். 1958 ஆகஸ்டுக்குப் பின் 1959 டிசம்பர் 31 வரை அவருக்குப் படமே வெளி வரவில்லை. அப்படிப் படமே வரவில்லை என்ற பேர் வரக்கூடாதென்ற கட்டாயத்தில் 1959 டிசம்பர் 31 அன்று 'தாய் மகளுக்குக் கட்டியதாலி' படம் வந்தது. அதற்கப்புறம் அவர் ரிஸ்க் எடுக்கவில்லை.
Bu hikaye Andhimazhai dergisinin AUG 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin AUG 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.