'இனிமே நமக்கு வாழ்க்கையில எதுவுமே நல்லது நடக்கப்போறதில்லை. அவ்வளவுதான் நாம முடிஞ்சுட்டோம்னு நினைச்சு கண் கலங்கி நிக்குறப்ப திடீர்னு ஒருத்தர் நம்ம கையைப் புடிச்சுட்டு நான் இருக்கேண்டா. என் கூட வான்னு நம்மள அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டுப் போவாங்க. அப்படிப்பட்டவர்தான் என்னோட புரடியூசர் அண்ணன் யுவராஜ்' நெகிழ்வுடன் தொடங்குகிறார் விநாயக் சந்திரசேகர். இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பரவலான கவனிப்பையும் பரபரப்பான வெற்றியையும் குவித்துள்ள ‘குட்நைட்' படத்தின் இயக்குநர்.
'இந்தக் கதையை ரெடி பண்ணிட்டு நான் ஏறி இறங்காத கம்பெனி இல்ல. ஆளுக்கொரு காரணத்துக்காக கதையை ரிஜக்ட் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல ரொம்ப நொந்துட்டேன். அப்பதான் யுவராஜ் அண்ணன் கிட்ட ‘அண்ணே இது வொர்க் அவுட் ஆகுற மாதிரி தெரியலை. நான் பழையபடி அசிஸ்டெண்ட் டைரக்டராவே வேலைக்குப் போயிடுறேன்'னு சொல்றப்ப எனக்கு அடக்க முடியாம அழுகை வந்துடுச்சி. உடனே அவர், இதை நான் படமா பண்றேண்டான்னு அணைச்சுக்கிட்டார். அப்படி சொல்றப்ப அவர்கிட்ட நயா பைசா கிடையாது. ஆனா ஒரு முதல் பட டைரக்டருக்கு இவ்வளவு வசதிகள் செஞ்சு தருவாங்களான்னு ஆச்சரியப்படுற அளவுக்கு பிரமாதா எனக்குப் பண்ணிக்கொடுத்தார்' என்கிற விநாயக் 'குட்நைட் கதை உருவான கதையை சொல்ல ஆரம்பித்தார்.
'என்னுடைய பெரிய அண்ணன் பயங்கரமாக குறட்டை விடுவார். அவரை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் இந்த கதை எழுதினேன்.
2018இல் இந்தக் கதையை எழுதினப்போது இதை ஒரு குறும்படமாத்தான் பண்ண முடியும்னு நினைச்சேன். அந்த எண்ணத்தை உடைச்சவர் அண்ணன் நடிகர் ரமேஷ் திலக்.
Bu hikaye Andhimazhai dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.