இந்நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தொடர்பான விவாதங்கள் இப்போது சூட்டைக் கிளப்பியிருக்கின்றன.
இப்படி ஓர் உயர்மட்டக்குழுவை ஒன்றிய அரசு அறிவித்ததுமே எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்நிலையில் இதிலுள்ள சாதக, பாதகங்களை பல்துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும் நிபுணர்களும் பேசியும் எழுதியும் தங்கள் கருத்தை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு முதல் மக்களவைத் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தது. அப்போது மக்களவைக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றுபோல் தேர்தல்கள் நடந்தன. அதாவது, ஒரு நாடு ஒரே தேர்தலைச் சந்தித்தது. இது 1967ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
ஆனால், சில சட்டமன்றங்களின் ஆட்சிக்கலைப்பு உள்ளிட்ட விஷயங்களால் இந்த முறை மாறிப்போனது. 1959ம் ஆண்டு கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது அப்போதைய ஒன்றிய அரசு.
பின்னர் 1968 மற்றும் 1969ல் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன. மக்களவையும் 1970ல் கலைக்கப்பட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற சுழற்சி வட்டம் உடைந்துபோனது.
இதன்பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் 1983ம் ஆண்டு மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியான அமைப்பை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதனையடுத்து பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1999ல் பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் ஒரே தேர்தல் என்பதை பரிந்துரைத்தது.
பிறகு, மீண்டும் பதினாறு ஆண்டுகள் கழித்து 2015ல் நாடாளுமன்ற நிலைக்குழு, ஒரே தேர்தல் பரிந்துரையை வலியுறுத்தியது. தொடர்ந்து 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, நீதிபதி சவுகான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது.
Bu hikaye Kungumam dergisinin 13-10-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 13-10-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
2024 உலகக் காப்பை
ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.
நாசியின் விளையாட்டுத் திடல்!
பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.
ஆதிக்க பசி
இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.