படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்தும் தியேட்டர்களில் அரங்குநிறைந்த காட்சிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு பேட்டரி வாங்கித் தந்தார் என்பதற்காக 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை ஆகியிருக்கும் பேரறிவாளன் இருக்கும் இதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் லட்சக் கணக்கான புல்லட்டுகளையும் சிதறவிட்டு ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுத்த ஒரு படம் மாபெரும் வெற்றி அடைவது என்பது உண்மையிலேயே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னான உளவியல் காரணங்களை ஆராய்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் குற்ற உலகம் (CRIME WORLD) இதுவரை எப்படிப் புனையப்பட்டிருக்கிறது என்பது பற்றிய புரிதல் இங்கே தேவைப்படுகிறது. கதாநாயகன் எந்த உலகைச் சேர்ந்தவன் என்பதை பொருத்து சினிமாவிற்குள் இருக்கும் குற்ற உலகை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகையில் குற்ற உலகில் இருக்கும் அசைக்கமுடியாத வில்லன்களை துணிந்து எதிர்த்துப் போராடும் ஒருவனாக ஹீரோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு இழப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி கெட்டவர்களை அழித்தொழிக்கும் இந்தவகையான கதாநாயக பிம்பமே எம்.ஜி.ஆர். காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வந்த பார்முலா. இவ்வகை படங்களில் பெரும்பாலும் ஹீரோ நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார் அல்லது வில்லன்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். அதன்பின்னான 80, 90 காலகட்டத்தில் இந்த நல்ல ஹீரோ கெட்ட வில்லன் என்ற கதைசொல்லல் முறை கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்து இரண்டாம் வகை படங்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன.
Bu hikaye Andhimazhai dergisinin July 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin July 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.